Monday, February 20, 2012

சொல்லாமலே.....


நண்பர்களே,
         நாம் நடுப்பட்டியை விட்டு வந்து பத்து வருடங்கள் ஆகின்றது என்பதனை நினைக்கையில் "பத்து வருசமாயிட்டா" என்று ஆச்சரியக் குறி தான் வருகிறது. காரணம் நமக்கு சரியானதொரு ஒய்வோ அல்லது நின்று நிதானமாக பயணிக்கக்கூடிய வாழ்வோ அமையவில்லை. 

வருடங்களின் வலிகள், மகிழ்வுகள், வெற்றிகள் யாவும் ஒரு சில நிமிடங்களே  நம்மை அக் காலக்கட்டங்களில் இருத்தி வைக்கின்றது.  நாம் மட்டுமல்ல இந்த் நூற்றாண்டின் நகர் மக்கள் யாவரும் இந்நிலையிலே தான் உள்ளனர்.















சில திட்டங்கள் நீண்ட காலமாக தீட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வரும்போது சொதப்பி விடும். ஆனால் திட்டமிடாமலேயே சிறப்பாக அமையக்கூடிய நிகழ்வுகளும் உண்டு. இங்கிருக்கும் நாங்கள் சந்தித்தது 2 வது வகை நிகழ்வு. 48  மணி நேரத்திற்குள்ளாக திட்டமிட்டு 8 பேர் ஒரு நாள் முழுவதும் பத்து வருடங்கள் பின்னோக்கி சென்றது, மகிழ்வான நிகழ்வாகும்.

கேட்டவுடன் அனைவரும் வருகிறோம் என சொல்லி, சொன்ன நேரத்திற்கு வருகை புரிந்தது மகிழ்ச்சி. குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதால் சிலரை அழைக்க இயலவில்லை என்பதை விட தொலைவில் உள்ளவர்களை வீணாக கட்டாயப்படுத்த வேண்டாம் என நினைத்ததால் பலரிடமும் சொல்லவில்லை.

ஆக மொத்தம் மதுரை சந்திப்பு நமக்கு தித்திப்பு.

  

வந்திருந்தவர்கள்:
சுதாகர், கிருஸ்ணபிரகாஸ், கிங்க்ஸ்டன் பினு, கந்தசாமி, இளவரசன், பால் சுபினெர், பொன்ராஜ் & சிரில்.
நாள்: 19/02/2012     இடம்: மாட்டுத்தாவணி, மதுரை.