Monday, February 3, 2014

கடற்கரையில்.....

பிப்ரவரி 02 ஜெகதீஸ் ராஜ ராஜன் திருமணத்தில் மற்றும் மணப்பாடு கடற்கரையில்.....







Tuesday, January 21, 2014

ராஜ ராஜன் அழைக்கிறார்...

பாசத்திற்குரிய நண்பன் ஜெகதீஷ் ராஜ ராஜன் தனது திருமணத்திற்கு நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறான். நேரில் வருகை தந்து வாழ்த்த வேண்டும் என விரும்புகிறான். 

விடுமுறை நாளாக இருப்பதால் தவறாது வருகை புரிந்து மனமாற வாழ்த்தலாம் வாருங்கள்.


திருமணம்

நாள்: 02 பிப்ரவரி 2014.
இடம்: ரத்னா கல்யாண மண்டபம், ஆறுமுகநேரி, திருச்செந்தூர்.
நேரம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை.

வரவேற்பு

நாள்: 02 பிப்ரவரி 2014.
இடம்: கே.டி.கே. திருமன மண்டபம், ஆறுமுகநேரி, திருச்செந்தூர்.
நேரம்: மாலை 7.00 மணி முதல் இரவு 9 மணி வரை.

தொடர்புக்கு: 96003 32135

Sunday, December 29, 2013

தித்திப்பாய்...

கிங்ஸ்டனின் திருமண நாள் நண்பர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. ஏனெனில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் மிகவும் மகிழ்ச்சிகரமான சந்திப்பாக இருந்ததும், எதிர்பாராத வகையில் அதிகமான (13) எண்ணிக்கையில் நண்பர்கள் கலந்து கொண்டதும் அந்த நாளை சமேலும் சிறப்புக்குரியதாக மாற்றியது. முந்தைய காலக்கட்டத்தின் நினைவுகளை தற்போதுதான் நடந்ததோ என அனைவரும் மகிழும் வண்ணம் தித்திப்பாய் இருந்தது. இது போன்ற மற்றொரு நாளுக்காக அனைவரும் காத்திருக்கிறோம்.










Saturday, December 21, 2013

பாசத்திற்குரிய நண்பர்களுக்கு...

வரும் டிசம்பர் 27 ஆம் நாள் "ஹெலன் நிஷாந்தி" இன் கரம்
பற்றுகிறேன். நாகர்கோவிலில் நடைபெறும் இத்திருமண வைபவத்திற்கு வருகை புரிந்து வாழ்த்த அன்புடன் அழைக்கிறேன்.

அன்புடன்,
கிங்ஸ்டன் பினு    


திருமண நாள்: 27 டிசம்பர் 2013
இடம்: சந்தையடி, கன்னியாகுமரி

வரவேற்பு: மாலை 6 மணி முதல் 9:30 மணி வரை
இடம்: நெய்யூர், நாகர்கோவில்

Sunday, December 8, 2013

குற்றாலச் சாரலின் குதூகலத்துடன் ...

குற்றாலச் சாரலின் குதூகலத்துடனும், அருவியில் குளித்த புத்துணர்வுடனும், இனிமையான நினைவுகளுடனும், மகிழ்வாக கலந்துகொண்ட கிருஷ்ணபிரகாஷ் திருமண நாளின் சில தருணங்கள். 


 
 


குறிப்பு: படங்களை பெரிதாக்க படங்களின் மேல் சொடுக்கவும்