Tuesday, July 28, 2009
Monday, July 27, 2009
நடுப்பட்டி வழியே ஒரு பயணம்! ஈரோடு - நடுப்பட்டி - குன்னத்தூர்
ஒரு சில மாதங்களுக்குப் பிறகு நம்ம நண்பர்களை சந்திக்க நினைத்தது ஒரு வழியாக நிறைவேறிவிட்டது. ஒரு வாரத்தில் திட்டமிட்டு உடனடியாக எல்லோரும் சந்தித்தது மறக்க முடியாத தருணம். காலையில் நான், அய்யாசாமி மற்றும் முத்துக்குமார் ஆகியோர் நேரடியாக புலவர் பாளையம் வந்தோம். அங்கு நாங்கள் பழைய நினைவுகளை பேசிக்கொண்டிருக்கும்போது ஜெயவேல் கோவையிலிருந்து வந்தான். அங்கு நாங்கள் தங்கிய வீட்டு ஓனர் கறி சோறு சமைத்துப் போட்டது ரொம்ப சந்தோசமா இருந்தது. அப்படியே நடுப்பட்டி போய் நம்ம காலேஜையும் பார்த்துட்டு வந்தோம்.






அடுத்து குன்னத்தூர் போகலாம்னு முடிவு பண்ணினோம். சிரிலும், நித்தியானந்தமும் எங்களுக்காக பெருமாநல்லூரில் காத்திருந்தார்கள். அவர்களை ஜெயவேல் காரில் அழைத்துக்கொண்டு குன்னத்தூருக்கு குன்னத்தூறான் யுவராஜோடு சென்றோம். அங்கு சென்று ஒரு லாட்ஜில் அறை எடுத்து ஓய்வெடுத்தோம். ஏழு வருடத்திற்கு பிறகு பலரும் சந்தித்ததால் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டிருந்தோம். சாயங்காலம் திருப்பூர் ரமேஷ் மாருதி வேனில் வந்திருந்தார். அவர் வேனில் செங்கர்பள்ளி தாபாவில் வயிறார சாப்பிட்டுவிட்டு ஈரோடு செல்ல திட்டமிட்டோம்.


அங்கே உள்ள நமது கல்லூரி தோழி நர்மதாவையும் சந்திக்க திட்டமிட்டு செல்போனில் தொடர்புகொண்டு தகவல் தெ
ரிவித்தோம். அனைவரும் ஈரோடு சென்று நர்மதாவை சந்தித்தோம். பிறகு அனைவரும் அடிக்கடி இதுபோன்ற சந்திப்புகளை ஏற்பாடு செய்து சந்திக்க வேண்டும் என முடிவு செய்து வருத்ததோடு விடைபெற்றோம்.
அன்புடன்,
கள்ளக்குறிச்சி ப்ரசன்னா வினோத்
(படங்களை பெரிதாக்க படங்களின் மேல் சொடுக்கவும்)
Sunday, July 12, 2009
Thursday, July 9, 2009
Hi friends!

Hi friends,
I am fine here. I hope u all enjoyed in Sudhakars marriage. I tell my congrats to him one more time. I will come to India December 15th. I thought to meet all our friends, so i have a plan. I invite all our friends to my home and also we can have a tour to kanya kumari and to all the nearest tourist places. I had already informed to Cyril about this. I think, he will make arrangements. so please contact him to ask the details. we will meet soon. Take care all of u my friends.
I am fine here. I hope u all enjoyed in Sudhakars marriage. I tell my congrats to him one more time. I will come to India December 15th. I thought to meet all our friends, so i have a plan. I invite all our friends to my home and also we can have a tour to kanya kumari and to all the nearest tourist places. I had already informed to Cyril about this. I think, he will make arrangements. so please contact him to ask the details. we will meet soon. Take care all of u my friends.
Thanks
Friday, July 3, 2009
சுதாகரின் திருமணத்தில்
நண்பர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஓடைப்பட்டி மண்ணின் மைந்தன் சுதாகரின் திருமணம் சூலைத் திங்கள் 2 ஆம் நாள் இனிதே நிறைவுற்றது. நண்பர்கள் அனைவரும் சந்திக்க இது ஒரு சிறந்த தருணமாக இருக்கும் என எண்ணியவாறு ஏறத்தாழ பதினோரு பேர் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட படிப்பு முடிந்து ஏழு வருடங்களுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையில் நண்பர்கள் சந்தித்தது சுதாகரின் திருமணத்தில்தான். பலருடைய முகங்களில் காலத்தின் மாற்றம் பெரிய அளவில் தெரியாவிட்டலும், அனைவரும் சற்று குழப்பமாகி பிறகு கண்டுபிடித்தது பொன்ராஜைத்தான்.
திருமணத்திற்கு முந்திய நாளே பலரும் வந்து தமது கருத்துக்கள், எதிர்காலம் குறித்த திட்டங்களை பகிர்ந்துகொண்டது, நெஞ்சத்தில் நெகிழ்ச்சியை உருவாக்கியது. திருமண நாளில் நமது நண்பர்களே மாப்பிள்ளைத் தோழர்களாய் வந்தது அனைவருக்கும் மகிழ்வளிக்கக் கூடியதாய் அமைந்தது. பல நண்பர்கள் அலைபேசியின் ஊடாக அவ்வவ்போது திருமணத்திற்கு வரமுடியாததின் வருத்தத்தையும், சுதாகருக்கு திருமண வாழ்த்துக்களையும் தெரிவித்த வண்ணம் இருந்தனர். சுதாகர் திருமணம் முடிந்து, அனைவரும் இனிய விருந்துண்டு மனமார வாழ்த்துக்களை தெரிவித்து ஒடைப்பட்டியிலிருந்து விடைபெற்றோம்.
அனைவரும் அவர்தம் ஊர்களுக்கு பிரிந்து செல்கையில் நண்பன் கும்பகோணம் கார்த்தி ஒரு அவசியமான கருத்தை முன் வைத்தார். ஆம் வருடத்திற்கு ஒருமுறையேனும் நம் நண்பர்கள் அனைவரும் ஓரிடம் கூடி நட்பினை ஆழப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதாகும். நிச்சயம் அருமையனதொன்றுதான், தற்சமயம் அதற்கு ஊன்றுகோலாய் அமைவது நண்பர்களின் திருமணம்தான். அத்திருமணங்களில் நாம் கண்டிப்பாய் கலந்து கொள்வதன் மூலம் நாம் சந்திக்க ஒரு வாய்ப்பு உருவாகின்றதல்லவா?
ஒடைப்பட்டியில் இருநாள்:
திருமணத்திற்கு முந்திய நாளே பலரும் வந்து தமது கருத்துக்கள், எதிர்காலம் குறித்த திட்டங்களை பகிர்ந்துகொண்டது, நெஞ்சத்தில் நெகிழ்ச்சியை உருவாக்கியது. திருமண நாளில் நமது நண்பர்களே மாப்பிள்ளைத் தோழர்களாய் வந்தது அனைவருக்கும் மகிழ்வளிக்கக் கூடியதாய் அமைந்தது. பல நண்பர்கள் அலைபேசியின் ஊடாக அவ்வவ்போது திருமணத்திற்கு வரமுடியாததின் வருத்தத்தையும், சுதாகருக்கு திருமண வாழ்த்துக்களையும் தெரிவித்த வண்ணம் இருந்தனர். சுதாகர் திருமணம் முடிந்து, அனைவரும் இனிய விருந்துண்டு மனமார வாழ்த்துக்களை தெரிவித்து ஒடைப்பட்டியிலிருந்து விடைபெற்றோம்.
அனைவரும் அவர்தம் ஊர்களுக்கு பிரிந்து செல்கையில் நண்பன் கும்பகோணம் கார்த்தி ஒரு அவசியமான கருத்தை முன் வைத்தார். ஆம் வருடத்திற்கு ஒருமுறையேனும் நம் நண்பர்கள் அனைவரும் ஓரிடம் கூடி நட்பினை ஆழப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதாகும். நிச்சயம் அருமையனதொன்றுதான், தற்சமயம் அதற்கு ஊன்றுகோலாய் அமைவது நண்பர்களின் திருமணம்தான். அத்திருமணங்களில் நாம் கண்டிப்பாய் கலந்து கொள்வதன் மூலம் நாம் சந்திக்க ஒரு வாய்ப்பு உருவாகின்றதல்லவா?
ஒடைப்பட்டியில் இருநாள்:








(படங்களை பெரிதாக்க படங்களின் மேல் சொடுக்கவும்)
Subscribe to:
Posts (Atom)