
ஒரு இடத்தின் வளர்ச்சியானது அதன் அருகிலோ அல்லது அப்பகுதியிலோ நிலவும் சாதகமான காரணிகள் மற்றும் நிறுவனங்களை பொறுத்ததாக அமையும். அந்த கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு பத்து வருடங்கள் கூட நிறைவடையாத நிலையில் அந்த பகுதியின் மாற்றங்கள் நமக்கு வியப்பைத் தருகின்றது. ஆம் ஏறத்தாழ 15க்கும் மேற்பட்ட கடைகள் புலவர்பாளையத்தில் அமைந்து, நகரத்தின் பொருட்கள் யாவும் அப்பகுதி மக்களுக்கும், மாணாக்கருக்கும் கிடைக்கும் வண்ணம் அனைத்து விதமான கடைகளும் வியாபாரம் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் 25 ஆண்டுகளைக் கடந்த EICT நடுப்பட்டி?
மேலே உள்ள புகைப்படத்தை பார்க்கும்போது அது கோணலாக இருப்பது தெரியும். பேருந்தில் பயணிக்கும்போது எடுக்கப்பட்டதால் ஏதேச்சையாக அப்படித்தெரிந்தாலும், அந்த புகைப்படம் EICTயின் உண்மை நிலையை நமக்கு உணர்த்துகின்றது. இன்றைக்கு EICT ஆனது பொறியியல் கல்லூரியாக உயர்ந்து! இருந்தாலும், மூன்று பேருந்துகள் நிற்பது நம் கண்ணுக்கு தெரிந்தாலும் அங்கே உள்ள கட்டடங்களும் நடுப்பட்டியின் பொட்டல் காடும் நமக்கு இன்றும் உணர்த்துவது யாதெனில் இன்னும் நமது EICT அப்படியேதானிருக்கிறது என்பதே.
No comments:
Post a Comment