Saturday, January 31, 2009

கல்யாணக் காலம்

இந்த வருடம், நிச்சயம் நமது நண்பர்கள் அடிக்கடி சந்திக்கும் தருணங்கள் அதிகமாக இருக்கும் என நம்புகின்றேன். ஏனெனில் பலரது மண வாழ்க்கை இந்த வருடம் தொடங்கக்கூடும் என்ற நண்பர்களின் தகவல்கள் அதனை உரூதிப்பதுத்துகிந்ரது. ஏற்கனவே திலீப்பின் திருமணம் இனிதே நடைபெற்றுள்ளது. அடுத்ததாக நம்மால் பாசத்துடன் "கோழி" என்று அழைக்கப்பட்ட ஜெகதீசின் திருமணம் பெப்ருவரி மாதம் 22 ஆம் நாள் நடைபெற இருக்கிறது. இன்னும் பிரசன்னா, சுதாகர், அந்தோணி தீப ராஜா, பங்கஜ் குமார், கந்தசாமி, பாபா சலீம் மாலிக்,.... என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. நண்பர்களின் திருமணத்தை காண ஒவ்வொருவரும் ஆவலுடன் காத்திருக்கின்றோம். எது செய்தாலும் அனைவருக்கும் சொல்லிவிட்டு செய்யுங்கள் என்பதை இந்த தருணத்தில் அனைவருக்கும் நினைவூட்ட கடமைப்பட்டிருக்கின்றேன்.

இதோ ஜெகதீஷின் அழைப்பு மடல்:
நண்பர்களே எப்படி இருக்கின்றீர்கள்? அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். நான் தற்சமயம் அரேபிய தேசத்தில் இருப்பதால் அனைவரையும் தொடர்புகொண்டு பேச இயலவில்லை. எனது திருமணத்திற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன். உங்களை காண ஆவலாக உள்ளேன். எனது திருமணம் 22 ஆம் தேதி நடக்கிறது. நான் 15 ஆம் தேதி தான் தமிழகம் வருகின்றேன். நாட்கள் குறைவாக உள்ளதால், அனைவரும் வரவேண்டும் என இதன் மூலம் அழைப்பு விடுக்கின்றேன். நீங்கள் தங்குவதற்கு குளிரூட்டப்பட்ட அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்கு உங்களை அழைத்து வரவும், கவனிக்க வேண்டிய பொறுப்பையும் எனது பங்காளியும், பாசத்திற்குரிய நண்பனுமான பங்கஜ் குமாரிடம் ஒப்படைத்துள்ளேன். எனவே கண்டிப்பாக அனைவரும் வந்து வாழ்த்த அன்போடு அழைக்கின்றேன்.
உங்கள் வரவை எதிர் நோக்கி,
ஜெகதீஷ்

திருமண நாள் : 22.02.2009
இடம் : மரியகிரி, களியக்காவிளை, நாகர்கோவில்.


தொடர்புகொள்ளுங்கள் :
ஜெகதீஷ் -
9600279941
பங்கஜ் குமார் - 9940092546
மின்னஞ்சல்: jag6377@gmail.com

No comments: