Wednesday, December 23, 2009

Happy Merry Christmas


In this X-mas,

In the daytime if sun shine so shall Ur expectations come true,

At night when moon comes out so shall U receive blesses,
then if rain fall so shall it going to carry all your problem away from U!


Happy Merry Christmas

Wednesday, December 16, 2009

Mulled Wine

Ingredients:


  • 750 ml of red wine
  • One peeled and sliced orange
  • 1/4 cup of brandy
  • 8-10 cloves of nutmeg
  • 2/3 cup honey or sugar
  • 3 cinnamon sticks
  • 1 tsp fresh ginger
   Preparation:-

Combine all ingredients in either a large pot or a slow cooker. Gently warm the ingredients on low to medium heat for 20-25 minutes. Stir occasionally to make sure that the honey or sugar has completely dissolved. When the wine is steaming and the ingredients have been well blended it is ready to serve.

Be sure to use a stainless steel,ceramic,heatproof glass or nonstick coated cooking pot/pan because other materials like aluminum, will react with the acidity of the wine and spoil the taste of your finished mulled wine.

Mulled wine is usually made with red wine, although it can be made with white wine. An alcohol-free form of mulled wine can be made by using fruit juice instead of wine.

The traditional mulled wine is wine that has spices added to it. It may also include citrus, such as orange or lemon.

It is served warm, but is not boiled, because boiling would cause the alcohol to evaporate.

Mulled wine is a lovely way to greet guests when they arrive at your home in a cold winter day or to share with the family around an open fire at Christmas.It's a great drink to have after a bracing walk or shopping trip. It also makes the house smell wonderfully festive, due to the persence of spices, that form an integral part of the recipe. If you want to treat your taste buds with alcoholic content and fun quotient. add a shot of liqueur.

இன்னும் செஞ்சு பாக்கல பாத்துடு சொல்லுறேன்.

Sunday, December 13, 2009

திருமண நல்வாழ்த்துக்கள்!

எங்கள் இனிய நண்பன் ஆண்டன் தீபராஜ் இன்று இல்வாழ்கையில் தம் துணையுடன் நல்வாழ்கையை தொடங்க போகிறார். அவருக்கு எங்கள் நல்வாழ்த்துகள்.

                     என்றும் இன்று   போல் இனிதாய், சிறப்பாய்,சகல செல்வத்தோடும் வாழ வாழ்த்துகிறோம்.

இப்படிக்கு,
கார்த்திக் குமார் மற்றும் வர இயலாத நண்பர்கள்.

Thursday, December 3, 2009

கார்த்திகை தீப வாழ்த்துகள்!

EICT நண்பர்கள் அனைவருக்கும் தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்
For more Information please See My Mobile Shop blog click herehttp://www.galaxymobilessankai.blogspot.com/

Tuesday, December 1, 2009

கார்த்திகை தீப வாழ்த்துகள்!

என் இனிய கார்த்திகை தீப நல்வாழ்த்துகள்!

Monday, November 30, 2009

டேய் பாக்கியராஜ்

ஏ எல்லாரும் எப்படி இருக்கீங்க?

Thursday, November 26, 2009

தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்



EICT நண்பர்கள் அனைவருக்கும் பக்ரீத் தின நல்வாழ்த்துக்கள்
For more Information please See My Mobile Shop blog click here
http://www.galaxymobilessankai.blogspot.com/

EID MUBARAK


HAPPY EID MUBARAK

WITH REGARDS

N.JAGADEESH KUMAR

Tuesday, November 3, 2009

அழைக்கிறார் - அண்டன் தீபராஜ்

நண்பர்கள் அனைவரும் திருமண வயதையடைந்து, தங்கள் வாழ்க்கை திருப்திகரமான வகையில் செல்வதாக நினைக்கும் தருவாயில்; தங்களை இல் வாழ்க்கையில் இணைத்து வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக பாசத்திற்குரிய நண்பன் அண்டன் தீபராஜாவும் வரும் திசம்பர் திங்கள்13 ஆம் நாள் திருமண பந்தத்தில் இணைகிறான்.

நீண்ட நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கும் காரணத்தை நீங்கள் உணர்வீர்கள். ஆம் நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் என்ற ஆசையின் பேரில்தான் நமது நண்பர்கள் தங்களை திருமணத்திற்கு அழைக்கிறார்கள். அதனை உணர்ந்து திசம்பர் 13 வேறு எந்த வேலையும் வைத்துக்கொள்ளாமல் தவறாது கலந்துகொள்ள பாசமுடன் அழைக்கிறான் நண்பன் அண்டன் தீபராஜ்.

அலைபேசி: 9994979813
மின்னஞ்சல்: antondeeparaj@gmail.com /antondeeparaj@yahoo.com

Friday, October 16, 2009

என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்





















Galaxy Mobiles
in சரவெடி தீபாவளி நல்வாழ்த்துகள்!!! & For more Information please See My Mobile Shop blog click here
http://www.galaxymobilessankai.blogspot.com

Thursday, October 15, 2009

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


பாசமிக்க இ.ஐ.சி.டீ. நண்பர்களுக்கு

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

பாசமுடன்.........

ஜெகதீஷ் குமார் .நெ

வாழ்த்துக்கள்!!!


என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!
நட்புடன்,
ஐயாசாமி

Wednesday, October 14, 2009

நான் இரசித்த கவிதை - அம்மா!

மேல் சட்டை போடாம
உன்காலடி சுத்தி வந்த
கணமெல்லாம் மறக்கலையே !

நாலாம் வகுப்புல
நாள்முடிச்சு வரும்போது
ஒத்தரூபா பணம்தந்து
வாழைப்பழம் வாங்கித்தந்த …

ஆறாம் வகுப்புல
அம்மையில படுத்தபோது
உப்பில்லாப் பண்டத்தை
அழுதுட்டே ஊட்டிவிட்ட …

பத்துப்பேர் பரிமாறும்
சிறந்தவகை உணவுகூட
நீ பேசிகிட்டே சுட்டுபோடும்
தோசை போல இல்லையம்மா …

விமானப் பயணமும்
பஞ்சுமெத்தை உறக்கமும்
பரதேசி எனக்கு
நீ போட்ட பிச்சையம்மா…

உன்னருகாமை இல்லாம
விம்பி விம்பி அழுதுகிட்டே
இழந்துவிட்ட உன்மடி சுகத்தை
ஏக்கமாய் நோக்குதம்மா ..

ஒவ்வொரு நொடியையும்
ஓடி ஓடி துரத்தி விட்டேன்
போகின்ற நொடியெல்லாம்
நான் வாழறதா நினைக்கலையே ..

எந்த நொடி நான் மறக்க
ஏறி வந்த ஏணியெல்லம்
உன் எழும்பால ஆனதுவே ..

இணையத்தில் நான் இரசித்த கவிதையிது. எழுதியவர் தெரியவில்லையெனினும், எழுதியவன் தாய்மையை உணர்ந்தவன் என்பது மட்டுமல்ல, அவன் வெளி தேசத்தில் இருக்கிறவன் என்பதும் உங்களுக்கு புரிந்திருக்கும்.

Monday, September 21, 2009

கொடைக்கானலில் ஒரு மகிழ்வான சந்திப்பு






(படங்களை பெரிதாக்க படங்களின் மேல் சொடுக்கவும்)
நிழற் படங்களில் ரமேஷ், ஐயாசாமி, கள்ளக்குறிச்சி பிரசன்னா, குன்னத்தூர் யுவராஜ், ஜெயவேல், சிறில் மற்றும் தங்கராஜ்.

Sunday, August 30, 2009

நீண்ட நாட்களுக்குப் பிறகு

நாம் தான் அடிக்கடி நண்பர்களோடு அலைபேசி வழியாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்புகொண்டு வருகிறோமே! பிறகு என்ன நீண்ட நாட்களுக்குப் பிறகு என நினைக்கிறீர்களா?

வேறொன்றுமில்லை நீண்ட நாட்களாக நண்பர்கள் பலரும் தேடிக்கொண்டிருந்த JP எனும் ஜெயப்ரகாசை கண்டுபிடித்ததுதான். கண்டுபிடித்தோம் என்பதை விட அவன் நம்மை கண்டுகொண்டான் என்பதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன். கிட்டத்தட்ட நம்மோடு படித்தவர்கள் பலரும் இன்று நமது தொடர்பு எல்லைக்குள் இருக்கிறார்கள். அதிலே இடையில் தொலைந்து போன ஒருவன் அதே போல வந்து நமது நட்பு வட்டத்திலே இணைந்திருக்கிறான். மகிழ்ச்சியான விசயமாகும்.

ஜெயப்ரகாஷ்
9344343367

Monday, July 27, 2009

நடுப்பட்டி வழியே ஒரு பயணம்! ஈரோடு - நடுப்பட்டி - குன்னத்தூர்

ஒரு சில மாதங்களுக்குப் பிறகு நம்ம நண்பர்களை சந்திக்க நினைத்தது ஒரு வழியாக நிறைவேறிவிட்டது. ஒரு வாரத்தில் திட்டமிட்டு உடனடியாக எல்லோரும் சந்தித்தது மறக்க முடியாத தருணம். காலையில் நான், அய்யாசாமி மற்றும் முத்துக்குமார் ஆகியோர் நேரடியாக புலவர் பாளையம் வந்தோம். அங்கு நாங்கள் பழைய நினைவுகளை பேசிக்கொண்டிருக்கும்போது ஜெயவேல் கோவையிலிருந்து வந்தான். அங்கு நாங்கள் தங்கிய வீட்டு ஓனர் கறி சோறு சமைத்துப் போட்டது ரொம்ப சந்தோசமா இருந்தது. அப்படியே நடுப்பட்டி போய் நம்ம காலேஜையும் பார்த்துட்டு வந்தோம்.






























அடுத்து குன்னத்தூர் போகலாம்னு முடிவு பண்ணினோம். சிரிலும், நித்தியானந்தமும் எங்களுக்காக பெருமாநல்லூரில் காத்திருந்தார்கள். அவர்களை ஜெயவேல் காரில் அழைத்துக்கொண்டு குன்னத்தூருக்கு குன்னத்தூறான் யுவராஜோடு சென்றோம். அங்கு சென்று ஒரு லாட்ஜில் அறை எடுத்து ஓய்வெடுத்தோம். ஏழு வருடத்திற்கு பிறகு பலரும் சந்தித்ததால் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டிருந்தோம். சாயங்காலம் திருப்பூர் ரமேஷ் மாருதி வேனில் வந்திருந்தார். அவர் வேனில் செங்கர்பள்ளி தாபாவில் வயிறார சாப்பிட்டுவிட்டு ஈரோடு செல்ல திட்டமிட்டோம்.

அங்கே உள்ள நமது கல்லூரி தோழி நர்மதாவையும் சந்திக்க திட்டமிட்டு செல்போனில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தோம். அனைவரும் ஈரோடு சென்று நர்மதாவை சந்தித்தோம். பிறகு அனைவரும் அடிக்கடி இதுபோன்ற சந்திப்புகளை ஏற்பாடு செய்து சந்திக்க வேண்டும் என முடிவு செய்து வருத்ததோடு விடைபெற்றோம்.
அன்புடன்,
கள்ளக்குறிச்சி ப்ரசன்னா வினோத்

(படங்களை பெரிதாக்க படங்களின் மேல் சொடுக்கவு
ம்)

Sunday, July 12, 2009

Really i missed tooooooooooooo


we can meet again ...........

wait untill paulson marriage

Thursday, July 9, 2009

Hi friends!


Hi friends,
I am fine here. I hope u all enjoyed in Sudhakars marriage. I tell my congrats to him one more time. I will come to India December 15th. I thought to meet all our friends, so i have a plan. I invite all our friends to my home and also we can have a tour to kanya kumari and to all the nearest tourist places. I had already informed to Cyril about this. I think, he will make arrangements. so please contact him to ask the details. we will meet soon. Take care all of u my friends.
Thanks

Friday, July 3, 2009

சுதாகரின் திருமணத்தில்

நண்பர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஓடைப்பட்டி மண்ணின் மைந்தன் சுதாகரின் திருமணம் சூலைத் திங்கள் 2 ஆம் நாள் இனிதே நிறைவுற்றது. நண்பர்கள் அனைவரும் சந்திக்க இது ஒரு சிறந்த தருணமாக இருக்கும் என எண்ணியவாறு ஏறத்தாழ பதினோரு பேர் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட படிப்பு முடிந்து ஏழு வருடங்களுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையில் நண்பர்கள் சந்தித்தது சுதாகரின் திருமணத்தில்தான். பலருடைய முகங்களில் காலத்தின் மாற்றம் பெரிய அளவில் தெரியாவிட்டலும், அனைவரும் சற்று குழப்பமாகி பிறகு கண்டுபிடித்தது பொன்ராஜைத்தான்.

திருமணத்திற்கு முந்திய நாளே பலரும் வந்து தமது கருத்துக்கள், எதிர்காலம் குறித்த திட்டங்களை பகிர்ந்துகொண்டது, நெஞ்சத்தில் நெகிழ்ச்சியை உருவாக்கியது. திருமண நாளில் நமது நண்பர்களே மாப்பிள்ளைத் தோழர்களாய் வந்தது அனைவருக்கும் மகிழ்வளிக்கக் கூடியதாய் அமைந்தது. பல நண்பர்கள் அலைபேசியின் ஊடாக அவ்வவ்போது திருமணத்திற்கு வரமுடியாததின் வருத்தத்தையும், சுதாகருக்கு திருமண வாழ்த்துக்களையும் தெரிவித்த வண்ணம் இருந்தனர். சுதாகர் திருமணம் முடிந்து, அனைவரும் இனிய விருந்துண்டு மனமார வாழ்த்துக்களை தெரிவித்து ஒடைப்பட்டியிலிருந்து விடைபெற்றோம்.

அனைவரும் அவர்தம் ஊர்களுக்கு பிரிந்து செல்கையில் நண்பன் கும்பகோணம் கார்த்தி ஒரு அவசியமான கருத்தை முன் வைத்தார். ஆம் வருடத்திற்கு ஒருமுறையேனும் நம் நண்பர்கள் அனைவரும் ஓரிடம் கூடி நட்பினை ஆழப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதாகும். நிச்சயம் அருமையனதொன்றுதான், தற்சமயம் அதற்கு ஊன்றுகோலாய் அமைவது நண்பர்களின் திருமணம்தான். அத்திருமணங்களில் நாம் கண்டிப்பாய் கலந்து கொள்வதன் மூலம் நாம் சந்திக்க ஒரு வாய்ப்பு உருவாகின்றதல்லவா?
ஒடைப்பட்டியில் இருநாள்:




(படங்களை பெரிதாக்க படங்களின் மேல் சொடுக்கவும்)

Monday, June 22, 2009

Saturday, June 13, 2009

அன்போடு அழைக்கின்றேன்


நண்பர்களே எனது திருமண அழைப்பிதழை நமது தொடர்பு ஊடகம் வழியாக வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். தபாலில் அனுப்புவதற்கு நேரம் இல்லாததால் இதன் மூலம் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துகின்றேன். தவறாது கலந்துகொள்ளுங்கள் என அன்போடு அழைக்கின்றேன். கூடிய விரைவில் அலைபேசி வழியாக உங்களை தொடர்பு கொள்கின்றேன். இந்த நாள் நாம் மீண்டும் கூடி, நம் நினைவுகளை பகிர்ந்துகொள்ளவும் ஒரு வாய்ப்பாக இருக்கும் என நம்புகின்றேன்.
உங்கள் வரவை எதிர் நோக்கி,
நண்பன் சுதாகர்.

Friday, May 29, 2009

அன்புடன் சுதாகர்.......

அன்புமிக்க நண்பர்களே,

சில நாட்களுக்குப் பிறகு உங்களோடு சில நொடித் துளிகளை செலவிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். உங்களோடு பகிர்ந்து கொள்ள மிகவும் மகிழ்ச்சியானதும், உங்களை காண வாய்ப்புள்ளதுமான ஒரு நாள் வந்திருக்கின்றது.

ஆம்! எனக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. எனது திருமண நாள் ஜூலை 2. நண்பர்களே, நீங்கள் நினைக்கலாம், "இவன் கல்யாண கார்டு அனுப்பாம மெயில் அனுப்பியிருக்கானே" என்று. நான் ஏன் பல நாட்களுக்கு முன்னதாகவும், மின்னஞ்சலிலும் உங்களை தொடர்பு கொள்கிறேன் என்றால், நமது நண்பர்கள் பலருக்கு நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே விடுமுறைக்கு திட்டமிட்டால் தான் அவர்கள் விடுமுறை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

நண்பர்களே! நான் திருமணத்திற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாகத்தான் சிங்கப்பூரிலிருந்து வருகிறேன். எனவே நேரில் வந்து அழைப்பது என்பது மிகக் கடினமான ஒன்று. அதனால் முதற்கட்டமாக உங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகவும், இன்னும் சில நாட்களில் தொலைபேசி வழியாகவும் தொடர்பு கொள்ள ஆவலாக உள்ளேன்.

இந்த திருமண நாள், நமது நடுப்பட்டி நண்பர்கள் நீண்ட நாட்களுக்குப்பிறகு சந்திக்க ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என நம்புகின்றேன். திருமண நாளுக்கு ஒரு நாளுக்கு முன்னதாகவே நண்பர்கள் அனைவரும் வந்து, நமது நினைவலைகளை பகிர்ந்து கொள்ள நட்போடு அழைக்கின்றேன்.

தாய் தமிழகத்தில் உள்ளவர்களின் வருகையையும், அயல் தேசத்தில் உள்ளவர்களின் வாழ்த்துக்களையும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.

அன்போடும், உங்கள் வருகையைக் காண ஆவலோடும்,

நண்பன் சுதாகர்.

பின்குறிப்பு:

நண்பர்களே, உங்களை ஒருங்கிணைத்து, அழைத்து வருவதற்கு நண்பன் சிரில் உதவுவான். அவன் உங்களை கூடிய விரைவில் தொடர்பு கொள்வான்.

Thursday, April 16, 2009

ஒரு சிறு கவிதை


oru kuti kavithai to my friends

hi friends


hello my friends, hw r u? i am very eager to talk with you all. i am in UAE. MY MAIL ID edwinjosephr@yahoo.co.in,edwinjosephr@gmail.com.

Friday, April 3, 2009

ஜெகதீஷின் திருமணத்தில்


சத்யா அண்ணன் & பிராங்க்ளின் (மாடு)


அப்புச்சி வினோத் குமார் தனது மனைவியுடன்