Monday, February 1, 2010

பிரசன்னா அனுப்பும் மண ஓலை!!!

பிரசன்னா என்றவுடன், எந்த பிரசன்னா? என்ற குழப்பம் வருவது தவிர்க்க இயலாதது. ஏனெனில் நம்மோடு படித்தவர்களில் மற்ற எந்த பெயரையும் விட இந்த பெயரில் தான் மூன்று நபர்கள் படித்தனர்.
மாறி வரும் கால, கலாச்சார  நடைமுறைகளில் காதல் திருமணங்கள் அதிகரித்து வருகின்றது. நமது சமுதாய வளர்ச்சிக்கு இத்தகைய காதல் கலியாணங்கள் அவசியமானதுமாக இருக்கிறது. சாதிகள் மறந்து இரு மனங்கள் இணையும்போது, இரு குடும்பங்கள் உறவுகளாகிறது. இத்தகைய குடும்பங்களும், அவர் தம் உறவுகளும் வருங்கால சந்ததியினருக்கு சாதிகளற்ற மனப்பாங்கை ஊட்டி வளர்ப்பதில் முன்னணி வகிக்கின்றது.

 நான் மேற்கூறிய காரணங்கள் எதற்காக என்பதை உணர்ந்திருப்பீர்கள். ஆம் மற்றுமொரு காதல் திருமணத்தை வாழ்த்த நாம் அழைக்கப்படுகிறோம். அழைப்பவர் நமது பாசத்திற்குரிய தேனி பிரசன்னா. வரும் 25 ஆம் நாள் வியாழக்கிழமையன்று பழனியில் வைத்து நடைபெற இருக்கின்றது. நண்பர்கள் அனைவரையும் நண்பன் பிரசன்னா அன்போடு அழைக்கின்றார்.

தொடர்பு கொள்ள: பிரசன்னா
97901 57650

1 comment:

Ays said...

Happy Married Life.....